அருள்மிகு லலிதாம்பிகை ஆலயம்

திருமீயச்சூர், திருவாரூர் மாவட்டம்

 Sri Lalithambigai_temple

சுவாமி : சகலபுவனேஸ்வரர், மேகநாதர்.

அம்பாள் : மேகலாம்பிகை, சௌந்தர்ய நாயகி, லலிதாம்பிகை.

தீர்த்தம் : சூரிய தீர்த்தம்.

தலவிருட்சம் : வில்வம் மரம்.

தலச்சிறப்பு : லலிதா சகஸ்ர நாமம் உருவான தலம் அம்மனின் அருள் பெருக்கு அதிகமான  ஆலயம். ஆபரணம் கொலுசு ஆகியவை அணிந்து பார்க்க பரவசிக்கும் அம்மன் திருமுகம், சிவ சக்தி வடிவம் பிரகாரத்தில் சிறப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளது.  நான்முக சண்டேசுவரர் சிறப்பு  ஆகும்.  கச்சூரிலும் நான்முக சண்டேசுவரர் உண்டு.  ஸ்ரீசனிஸ்வரின் அவதாரத் திருத்தலம்.   ஸ்ரீசூரியனாரின் சாபம் போக்கிய தலம்.  ஆகவே இங்கே நவக்கிரகங்களுக்குச் சந்நிதி இல்லை.   மாறாக 12 ராசிகளுக்கு உரிய 12 நாகர்களும் உள்ளனர்.  இவர்களுக்கு தீபமேற்றி, அர்ச்சனை செய்து  வழிபட்டால், ராகு - கேது முதலான சகல தோஷங்களும் விலகும், திருமணம் முதலான அனனத்து  வரங்களும் கிடைக்கும்.

தலவரலாறு : இருப்பதிலேயே மிகப் பெரிய பாவம், இறைவனை தரிசிப்பதற்கு ஆசைப்படும்  ஒருவருக்கு, முட்டுக்கட்டை போடுவதுதான்! ஒருவரது அங்கக் குறைபாட்டினைச் சுடிக்காட்டி  ஏளனம் செய்வதும் மகாபாவம்.  சூரிய பகவான் இந்த இரண்டும் பாவங்களையும்  செய்தார்! சூரியனின் ரதத்தினைச் செலுத்துகிற அருணன் அங்கஹீனம் கொண்டவன்; அவனுக்கு  திருக்கயிலாயத்துக்குச் சென்று சிவனாரை தரிசிக்க வேண்டும் என விருப்பம்.  சூரியனிடம்  அனுமதி கேட்டதற்கு, மறுத்ததுடன் உடற் குறையைச் சொல்லி ஏளனம் செய்தான்.  சிவபக்தியில்  திளைத்திருந்த அருணன், மோகினிப் பெண்ணாக உருவெடுத்தான். திருக்கயிலாயம் புறப்பட்டான்;  மோகினியின் அழகில் மயங்கினான் இந்திரன்.  இதில் உருவானவன் தான் வாலி.  எண்ணம்  ஈடேறியது.  சிவதரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில், திரும்பி வந்த அருணன்,  சூரியனாரிடம் விஷயத்தைச் சொன்னான். 'மோகினிப் பெண்ணாகவா? உருவம் மாறிச் சென்றாயா? எங்கே  மாறிக்காட்டு' என்றார்.

அருணன், மோகினியாக மாறினான்.  அழகில் சூரியனை மயக்கினான்.  விளைவு.. சுக்ரீவன்  பிறந்தான். தனது பக்தனைத் தடுத்து, அவனது ஊனத்தைக் கிண்டல் செய்ததைச் சும்மா விடுவாரா,  சிவனார்? சூரியனைச் சபித்தார்.  இருளடைந்து போனார் சூரியனார்.  ஏழு மாதங்கள்,  மேகமண்டலத்தில் எங்களை யானை மீது வைத்து பூஜித்து வா. அப்போது தான் உனது பாவம் தீரும்'  என அருளினார்.  இதை அடுத்து சூரியனார், மேகமண்டலத்தில் யானை மீது, சிவ-பார்வதியை  வைத்து பூஜை செய்யத் துவங்கினார். ஆனால், ஏழு மாதங்கள் நிறைவுறுவதற்கு முன்பே,  சிவனாரிடம் சென்று, 'என்ன இது... இன்னும் சாப விமோசனம் தரவில்லையே?' என்று  கேட்க...  வெகுண்டாள் ஸ்ரீபார்வதி.  'உரிய ‍‌‌‍‌நேரம் வரும் வரை பொறுக்க மாட்டாயா?' என்று கடும்  உக்கிரத்துடன் சூரியனாருக்குச் சாபம் கொடுக்க எழுந்தாள்.  பதறிப்போன சிவனார், 'எற்கெனவே  கொடுத்த சாபத்தால் இருளில் மூழ்கினான் சூரியன்.  இன்னொரு சாபம் கொடுத்தல், இந்த உலகம்  இருளில் விழிபிதுங்கித் தவிக்கும்.  வேண்டாம் தேவி, சாந்தமாக இரு!' என்று உமையவளை அமைதிப்படுத்தினார்.  பிறகு உரிய காலம் வந்ததும், சூரியனாருக்கு சாப விமோசனம் அளித்தார்.  அவரின் திருமுகமும் இந்த உலகமும் பழையபடி இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வந்தது!  சூரியனாருக்கு அருளிய ஈசன், ஸ்ரீமேகநாதர் எனும் திருநாமத்துடன், கஜபிருஷ்ட விமானத்தின்  கருவறையில், அனைவருக்கும் அருள் புரிந்து வருகிறார், அந்தத் திருத்தலம், திருமீயச்சூர்  எனப்படும்.  இங்கே, ரதசப்தமி விழா விமர்சையாகக் கொண்டாடப் படுகிறது. அது மட்டுமா?  சித்திரை மாதம் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை, ஸ்வாமியின் மீது கதிர்களால், பூஜிக்கிறார்  சூரிய பகவான்!

வழிபட்டோர் :  ஸ்ரீசனிஸ்வரர், எமதருமர், அருணன், கருடன், வாலி, சுக்ரீவன் ஆகிய ஆறு பேரின் அவதாரத் தலம் இது!

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை மாலை 4.30 மணி முதல் 8.30  மணி  வரை.

அருகிலுள்ள நகரம் : மயிலாடுதுறை.

கோயில் முகவரி : அருள்மிகு மேகலாம்பிகை சமேத சகலபுவனேஸ்வரர் திருக்கோவில் (லலிதாம்பிகை கோயில்),

திருமீயச்சூர் - 609 405, திருவாரூர் மாவட்டம்.

தொலைபேசி எண் : 94448 36526, 94446 98841.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. ஹோட்டல் செல்வீஸ் (பி) லிமிடெட் 2,

கட்டுகார ஸ்ட்ரீட்,

சந்தமங்களம்,

திருவாரூர் - 610 002,

Ph : 04366 222 082.


2. அருண் ஹோட்டல்,

சந்தமங்களம்,

கே.டி.ஆர். நகர்,

திருவாரூர்,

தமிழ்நாடு - 610 001.


3. ஹோட்டல் காவேரி,

சந்தமங்களம்,

கே.டி.ஆர் நகர்,

திருவாரூர்,

தமிழ்நாடு - 610 003.


4. ஹோட்டல் எம்.எம்.எ,

டாக்டர் கலைஞர் நகர்,

மன்னார்குடி ரோடு,

டி.நகர்,

விளாமல்,

திருவாரூர் - 610001,

Ph:04366 220 218.

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (453 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள்

 


சுயம்பு நாதா சுவாமி
2.2km

அதிசேஷ தீர்த்தம்
6.5km

கூத்தனூர் சரஸ்வதி
5.3km

சனி-திருநள்ளாறு
18.6km

அக்னிஸ்வரர் சுவாமி
17.9km
ராமநாத சுவாமி
19.4km