அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோவில்

திருக்கோவிலூர், விழுப்புரம் மாவட்டம்

 ulagalantha_perumal_temple

சுவாமி : த்ரிவிக்ரமன் (திருவடியை உயரே தூக்கிய நிலை நின்ற திருகோலம்).

அம்பாள் : பூங்கோவல் நாச்சியார்.

தீர்த்தம் : பெண்ணையாறு, கிருஷ்ணா தீர்த்தம், சக்ர தீர்த்தம்.

விமானம் : ஸ்ரீஹர விமானம்.

தலவிருட்சம் : புன்னை மரம்.

தலச்சிறப்பு : வாமன த்ரிவிக்ரம அவதார ஸ்தலம்.  இந்த திவ்ய தேசத்தில்தான் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்ற முதலாழ்வார்கள் மூவரும் ஓர் இரவில் இடைகழியில் சந்தித்து பெருமாளையும் பிராட்டியையும் நேரில் இருட்டில் நெருக்கியபடி சேவித்து மூன்று  திருவந்தாதிகளை பாடிய தலம்.  மூலவர் வலக்கையில் சங்கமும் இடக்கையில் சக்ரமுமாக  வலகாலால் வையம் அளந்து நிற்கிறார்.  கோயிலுக்குள் இருக்கும் துர்க்கை தேவதாந்திரமாகக்  கருதப்படுவதில்லை.  மகாபலியின் கர்வத்தை அடக்கி ஆட்கொண்ட ஸ்தலம்.

தேசிகன்  தேஹளீசதஸ்துதி இயற்றிய ஸ்தலம்.  எம்பெருமானார் ஜீயர் பரம்பரை மஹான்கள் ஆதிக்கத்துக்குட்பட்ட ஸ்தலம்.  இந்த ஊர் பஞ்ச க்ருஷ்ணாரண்ய கேஷ்த்திரங்களில் ஒன்று.  மற்றவை – திருக்கண்ணங்குடி, திருக்கண்ணன் கவித்தலம், திருகண்ணபுரம், திருகண்ணமங்கை.  மூலவரின் திருமேனி தாருவால்(மரம்) ஆனது.  இவ்வளவு பெரிய பெருமாள் நின்ற கோலத்தில்  வேறு எங்கும் கிடையாது.  சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில்  அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு : மகாபலி என்னும் அரசன் தான தர்மத்தில் சிறந்தவனாக இருந்தாலும் தன்னை விடப்  புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்து விடக் கூடாது என்பதற்காக அசுர குல குருவான  சுக்கிராச்சாரியார் தலைமையில் மாபெரும் யாகம் நடத்தினான்.  அவனது ஆணவத்தை அடக்கும்  பொருட்டு விஷ்ணு வாமன(குள்ள) அவதாரம் எடுத்து யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து மூன்றடி  மண் தானமாக கேட்கிறார்.

வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து சுக்கிராச்சாரியார் மூன்றடி  மண் தானம் தர விடாது தடுக்கிறார். ஆனாலும் குருவின் பேச்சை மீறி தானம் தர மகாபலி ஒப்புக்  கொள்கிறான்.  அப்போது  மகாவிஷ்ணு விசுவரூபம் எடுத்து தன் பாதத்தின் ஒரு அடியை பூமியிலும், ஒரு அடியை  ஆகாயத்திலும் வைத்துவிட்டு மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்கிறார்.  வந்திருப்பது  மகாவிஷ்ணு என்றுணர்ந்த மகாபலி தன் தலையை தாழ்த்தி தன் தலையை தவிர வேறு இடம்  என்னிடம் இல்லை என்கிறான்.  

விஷ்ணுவும் விடாது மகாபலியின் தலைமீது தன் பாதத்தை  அழுத்தி மூன்றாவது அடியை தாரை  வார்த்து தா என்று சொல்ல மகாபலி கெண்டியை எடுத்து  தானமாக தர முயல சுக்கராச்சாரியார்  வண்டு உருவம் எடுத்து கெண்டியை அடைத்து தண்ணீர் வர  விடாமல் தடுக்க விஷ்ணு தர்ப்பை  புல்லால் குத்திவிடுகிறார். இதனால் குருடாகி சுக்கிராச்சாரியார்  வெளியேறிப் போய் விடுகிறார்.  மகாபலி கெண்டியை எடுத்து மூன்றாவது அடியை தானம் செய்து  மண்ணில் புதையுண்டு  போனான்.  அவனது ஆணவத்தை இவ்வாறு அடக்கிய பின்பு மகாபலியை விஷ்ணு தன்னோடு  சேர்த்து கொண்டார் என்று தலவரலாறு கூறுகிறது.

நடைதிறப்பு : காலை 6.30 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள நகரம் : விழுப்புரம்.

கோயில் முகவரி : அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோவில்,

திருக்கோவிலூர் - 605757, விழுப்புரம் மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம்:

1. ஹோட்டல் எஸ். கே.டி.சி

கிராண்ட் பேலஸ் திருகோவிலூர்,

கள்ளக்குறிச்சி மெயின் ரோடு,

திருகோய்லூர் டு கள்ளக்குறிச்சி மெயின் ரோடு,

திருகோவிலூர்.

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.38 (451 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள்

 

ஆதி திருவரங்கம்
20km

கொளஞ்சியப்பர்
64.8km

விருதகிரீஷ்வரர்
62.5km

வைத்தீஸ்வரன்
70.9km

பூவராக சுவாமி
81.8km
தில்லை காளி
102km