அறுபத்து மூவர் திருக்கோவில்

கும்பகோணம், தஞ்சாவூர்

arupathumoovar_temple

 

சுவாமி : அறுபத்து மூவர் நாயன்மார்கள்.  

தலச்சிறப்பு : சிவனை பற்றி பாடல்களை பாடும் அறுபத்து மூவர் நாயன்மார்களுக்காக  உருவாக்கப்பட்ட கோவில் இது.  அறுபத்து மூன்று நாயன்மார்களின் அவதாரத் தலங்களில்  இன்றைய தமிழக எல்லையில் உள்ளவை 58 தலங்கள்.  மற்றவை காரைக்காலில் ஒன்று,  ஆந்திராவில் ஒன்று, கன்னடத்தில் ஒன்று, கேரளத்தில் இரண்டுமாக அமைந்துள்ளன.

மன்னர்கள் காலத்திலேயே 29 நாயன்மார்களுக்கு ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.  அவற்றுள் பெரும்பாலானவை பழுதுபட்டும் பராமரிப்பு இன்றியும் காணப்படுகின்றன.  திருக்கோவில்  முற்றிலும் இல்லாமல் இருப்பவை தமிழக எல் லையில் மட்டும் 29 அவதாரத் தலங்கள்.

தல வரலாறு : நாயன்மார் என்போர் கி.பி 400-1000 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த  சிறந்த சிவனடியார்கள் சிலராவார்கள்.  சுந்திரமூர்த்தி நாயன்மார் திருத்தொண்டத் தொகையில்  அறுபத்து இரண்டு நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார்.  அதன் பின் சேக்கிழார் திருத்தொண்டர்  தொகையில் கூறப்பட்ட அறுபத்து இரண்டு பேருடன் சுந்தமூர்த்தி நாயன்மாரையும் இணைத்து அறுபத்து மூவரின் வரலாற்றை திருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணத்தில்  குறிப்பிட்டுள்ளார்.

நாயன்மார்களுக்கு சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் கற் சிலைகள் வைக்கப்படுகின்றன.   அத்துடன் அறுபத்து மூவரின் உலோகசிலைகளும் ஊர்வலத்தின் பொழுது எடுத்துச்  செல்லப்படுகின்றன. நாயன்மாரில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும், நாயன்மார்  வரிசையில் தனியாக இல்லாத மாணிக்கவாசகர் அவர்களும் முதன்மையானவர்கள்.  இந்த  நால்வரும் சைவ சமய குரவர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

சைவத் திருமுறைகள் என அழைக்கப்படும் 12 திருமுறைகளின் தொகுதியில் நாயன்மாரின்  பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.  முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தராலும்,  திருமுறைகள் 4,5,6 திருநாவுக்கரசராலும், 7ஆம் திருமுறை சுந்தரராலும் ஆக்கப்பட்ட பண்ணோடு  அமைந்த இசைப்பாடல்களாகும்.  நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள்.   மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே.  பலரும் பல்வேறு தொழில்கள் செய்து  உயிர்வாழ்ந்தவர்கள்.  இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும்  இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல்  இரவு  8.00 மணி வரை.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி : அறுபத்து மூவர் திருக்கோவில்,

திருவாய்ப்பாடி, கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.

  1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (453 Votes)

 இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள்

 


சத்யகிரீஸ்வரர்
2.4km

பாலு கந்தநாத சுவாமி
1 km

அருணஜடேஸ்வரர்
1.7Km

கைலாசநாதர்
2.6m

வைகுண்ட பெருமாள்
2.1km

ஊருடையப்பர்
1.1km