அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்
ஏனாநல்லூர், கும்பகோணம்

Karpagambal-samaetha-sri-brahmapureeshwarar_temple

சுவாமி : ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்.

அம்பாள் : கற்பகாம்பாள்.

தீர்த்தம் : கங்கா தீர்த்தம்.

தலச்சிறப்பு : இத்திருத்தலத்தில் 12/4/2012 அன்று திருக்குடமுழுக்கு நடைபெற்றது.  இத்தலத்தில் இறைவன் பிரமபுரீஸ்வரர், இறைவி கற்பகாம்பாளாக பக்தர்களுக்கு அருள்பாலிகின்றனர்.  எயினனூர் என்னும் இவ்வூர் மருவி ஏனாநல்லூர் என அழைக்கப்படுகிறது.

தல வரலாறு : ஏனாதிநாத நாயனார் அரசகுடும்பத்தினருக்கு வாள்வித்தை பயிற்றுவித்தவர் (இவரது காலம் கி.பி. 660 – 840  அப்பருக்கு பிற்காலத்தவர்).  இதனால் ஏனாதி நாயனாருக்கு புகழும் பெருமையும் சேர்ந்தது.  அதிசூரன் என்பவனும் வாள்  வித்தையில் பயிற்சி அளிப்பவன்.  தற்பெருமையினால் மிகக் கர்வம் கொண்டு தீய எண்ணங்களை வளர்த்துக் கொண்டான்.   இதனால் அதிசூரனுக்கு மதிப்பு குறைந்தது.  இதனால் ஏனாதி நாயனாரை எதிரியாக கருதி அவரிடம் நேரில் சென்று போர் செய்ய  அறைகூவல் விடுத்தான் அதிசூரன்.  வெளியிடத்தில் சாளக்கரை போட்டி நடக்க இருவரும் சம்மதித்தனர்.

அதிசூரனுக்கும், ஏனாதி நாயனாருக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் இருபக்கமும் பலர் உயிர் துறந்தனர்.  அதிசூரன் போரில்  தோல்வியடைந்தான்.  ஏனாதி நாயனார் தன்னைவிடச் சிறந்த பயிற்சியாளர் என்ற உண்மையை அறிந்து கொண்டாலும் அவன்  மனதின் தீய எண்ணங்கள் ஏனாதி நாயனாரைக் கொல்ல திட்டம் தீட்டியது.  ஏனாதி நாயனார் திருநீற்றுத் தொண்டில்  சிவபெருமானையும் சிவனடியார்களையும் வழிபட்டு வந்தார்.  இதனால் திருநீறு பூசிய அடியார்க்கு தீங்கு செய்ய மாட்டார்  என்பதை அறிந்தான் அதிசூரன்.  அதிசூரன் மீண்டும் ஏனாதி நாயனாரிடம் சென்று தனியாக போர்புரிய அழைப்பு விடுத்தான்.

சிவவேடம் பூண்டு சண்டைக்கு அழைக்க இதுவரை திருநீறு பூசாத அவன் நெற்றியில் சைவ சின்னமான விபூதி பட்டை  கேடயத்தால் மறைக்கப்பட்டிருந்தது கேடயம் விலகி நன்றாகத் தெரியவே அதைப் பார்த்தி ஏனாதி மிக்க மகிழ்வு கொண்டு  அமைதியாக நிற்க அதிசூரன் தன் வாளால் ஏனாதி நாயனாரை தாக்கினான்.  சிவனடியாரகத் தென்பட்டதால் அமைதியாக  இருக்கவே அதிசூரன் பழிதீர்த்து கொண்டதால் இறைவன் ஏனாதி நாயனாருக்கு காட்சி தந்து முக்தி அளித்தார்.  எனவே இத்தலம்  ஏனாதிநாத நாயனார் திருக்கோவில் எனவும் அழைக்கப்படுகிறது.

வழிபட்டோர் : ஏனாதிநாத நாயனார்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி : ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்,

ஏனாநல்லூர், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

 

1. சிவமுருகன் ஹோட்டல்,

60 பீட் மெயின் ரோடு,

நியர் நியூ பஸ் ஸ்டாண்ட்,

கும்பகோணம் - 612 001,

Ph : 096000 00384.

 

2.சாரா ரீஜன்ஸி,

45/1 சென்னை ரோடு,

கும்பகோணம் - 612002,

Ph : 082200 05555.

 

3.குவாலிட்டி இன்,

வி.ஐ.ஹெச்.எ நியூ ரயில்வே ரோடு,

கும்பகோணம்,

தஞ்சாவூர் - 612 001,

Ph : 0435 255 5555,

 

4.ஹோட்டல் கிரீன் பார்க்,

எண். 10, லக்ஷ்மி விலாஸ் ஸ்ட்ரீட்,

கும்பகோணம் - 612 001,

Ph : (0435) - 2402853 / 2403914.


5.ஹோட்டல் வினாயகா - கும்பகோணம் 132C,

காமராஜ் ரோடு, கும்பகோணம் - 612 001,

Ph : +91 435 240 03 56, +91 435 240 03 57, +91 4296 272 110.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. வெங்கட்ரமணா உணவகம்,

No 40, TSR பெரிய வீதி,

கும்பகோணம் - 612001,

அருகில் காந்தி பார்க்,

Ph : +(91)-9442130736.

 

2. ஸ்ரீ பாலாஜி பவன்,

1, சாஸ்திர காலேஜ் ரோடு,

கும்பகோணம் - 612001

Ph : +(91)-435-2424578.

 

3. ஹோட்டல் சண்முக பவன்,

16, கும்பேஸ்வரர் தெற்கு வீதி,

கும்பகோணம் - 612001.

Ph : +(91)-435-2433962.

 

4. கௌரி ஷங்கர் ஹோட்டல்

No 47, ஜான் செல்வராஜ் நகர்,

கும்பகோணம், 612001

Ph : +(91)-9443131276, +(91)-435-2431177, +(91)-435-2430736.

 

5. ரயாஸ் கார்டன் உணவகம்,

No 18 ரயாஸ் ஹோட்டல்,

தலைமை அஞ்சல் அலுவலகம் ரோடு,

கும்பகோணம் , 612 001.

Ph : +(91)-435-2423170, 2423171, 2423172, 2423173.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (453 Votes)

 

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள்

 


ஆகாச மாரியம்மன்
2.5 km

வீரமா காளியம்மன்
2.1 km

ஸ்ரீநிவாச பெருமாள்
2.5 km 
கருக்குடிநாத சுவாமி
2.9 km
ராமநாதசுவாமி கோவில்
2.4 km
     அகத்தீஸ்வரர் சுவாமி
3.8 km