அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர்(குரு) திருக்கோவில்

 ஆலங்குடி, திருவாரூர் மாவட்டம்

Alangudi-gurustalam_temple


சுவாமி : ஆபத்சகாயேஸ்வரர்.

அம்பாள் : ஏலவார்குழலி.

தீர்த்தம் : பிரம்மதீர்த்தம், அமிர்த புஷ்கரணி.

தலவிருட்சம் : பூளை என்னும் செடி.

தலச்சிறப்பு : இக்கோவிலில் குருதட்சிணாமூர்த்தியை வழிபட்டால் குருதோஷம் நிவர்த்தியாகும். குருபலன் கிடைக்கிறது என்பது சிறப்பு.  தோல் வியாதி உள்ளவர்கள் இத்திருக்கோவிலை சுற்றி உள்ள "அமிர்தபுஷ்கரணி" யில் நீராடி ஆலயத்தின் சிவபெருமானை வழிபட்டால் நோய் விலகும் என்பது ஐதீகம். குருபெயர்ச்சி தினத்தில் வழிபடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.  இத்தலத்தில் ஏழுந்தருளியுள்ள விநாயகர் பக்தர்களின் மனக்கவலையை தீர்த்து வைப்பதால் "கலங்காமல் காத்தவிநாயகர் " என பக்தியுடன் அழைக்கப்படுகிறார்.

தல வரலாறு :  முன்னொரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய முற்பட்டனர். அவர்கள் தேவாமிர்தத்தை பெறுவதற்காக வாசுகி என்ற தேவலோக பாம்பை கயிறாகவும், மந்தார மலையை மத்தாகவும் கொண்டு கடைந்தனர்.  அப்போது அந்தப் பாம்பு கக்கிய ஆலகால விஷத்தை, சிவபெருமான் உலகத்தை காக்கும் பொருட்டு உட்கொண்டார்.  விஷத்தை அருந்தி உலகைக் காத்ததால் சிவபெருமான் ரட்சகர் என்று பொருள் படும் படி ஆபத்சகாயேஸ்வரர் என்று அன்போடு அழைக்கப் படுகிறார். இந்த இடமும் ஆலங்குடி என்று புகழ் பெற்றது.  சிவ வழிபாடு நீங்கலாக, கிரக நிலைகளால் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்து விடுபட வேண்டி பிருஹஸ்பதி அல்லது குரு பகவானை (வியாழன்) வழிபட மக்கள் தொலைவிலும் அருகிலும் இருந்து கூட்டமாக வருகின்றனர்.   எல்லா வருடமும் குருப் பெயர்ச்சியின் பொது துரதிர்ஷ்டங்களில் இருந்து விடுபெற விக்ரஹத்திற்கு மங்கள அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

மற்றொரு கதையில் முசுகந்தன் என்ற சோழ மன்னன், கோவில் கட்டுவதற்காக தனது மந்திரி அமுதோகரிடம் பணம் கொடுத்தான்.  ஆனால் மந்திரியோ மன்னன் கொடுத்த பணத்தை பயன்படுத்தாமல் தனது பணத்தை பயன்படுத்தி கோவில் கட்டினான்.  பின்னர் மன்னன் வந்து கோவில் கட்டிய புண்ணியத்தில் பங்கு கேட்க, மந்திரி மறுத்துவிட்டார்.  இதனால் கோபமடைந்த மன்னன் மந்திரியின் தலைய வெட்ட வாளை எடுத்து ஓங்க இறைவன் தோன்றி அமுதோகரை தன்னுடன் சேர்த்துக்கொண்டதே இக்கோவில் வரலாறு ஆகும்.  மற்றொரு முறை திருவாரூரை ஆட்சி புரிந்த சோழ மன்னன் இங்கிருந்த சுந்தரர் சிலையின் அழகை கண்டு அதனை திருவாரூருக்கு எடுத்துச் செல்ல முயற்சித்தான்.  இதனை அறிந்த கோவில் அர்ச்சகர் அச்சிலையை குழந்தையாக பாவித்து அதற்கு அம்மை நோய் தாக்கி இருப்பதாக கூறி மறைத்து வைத்து சிலையை காப்பாற்றினார்.  இப்பொழுதும் அந்த சிலையில் அம்மைத் தழும்புகள் இருப்பதைக் காணலாம்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

பூஜைவிவரம் :

நான்கு கால பூஜைகள்,

காலசந்தி - காலை 9.00 மணி,

உச்சிகாலம் - மதியம் 12.30 முதல் 1.00 மணி,

சாயரட்சை - மாலை 5.30 முதல் 6.00 வரை,

அர்த்தசாமம் - இரவு 8.30 முதல் 9.00 வரை.

திருவிழாக்கள் : மாசிமாதம் 3-வது வியாழக்கிழமை "மாசி மகா குருவார தரிசனவிழா".

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில்முகவரி : அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்,

ஆலங்குடி - 612 801, வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம்.

தொலைபேசி எண் : 04374 - 269407.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. சிவமுருகன் ஹோட்டல்,

60 பீட் மெயின் ரோடு,

நியர் நியூ பஸ் ஸ்டாண்ட்,

கும்பகோணம் - 612 001,

Ph : 096000 00384.

 

2.சாரா ரீஜன்ஸி,

45/1 சென்னை ரோடு,

கும்பகோணம் - 612002,

Ph : 082200 05555.

 

3.குவாலிட்டி இன்,

வி.ஐ.ஹெச்.எ நியூ ரயில்வே ரோடு,

கும்பகோணம்,

தஞ்சாவூர் - 612 001,

Ph : 0435 255 5555,

 

4.ஹோட்டல் கிரீன் பார்க்,

எண். 10, லக்ஷ்மி விலாஸ் ஸ்ட்ரீட்,

கும்பகோணம் - 612 001,

Ph : (0435) - 2402853 / 2403914.


5.ஹோட்டல் வினாயகா - கும்பகோணம் 132C,

காமராஜ் ரோடு, கும்பகோணம் - 612 001,

Ph : +91 435 240 03 56, +91 435 240 03 57, +91 4296 272 110.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. வெங்கட்ரமணா உணவகம்,

No 40, TSR பெரிய வீதி,

கும்பகோணம் - 612001,

அருகில் காந்தி பார்க்,

Ph : +(91)-9442130736.

 

2. ஸ்ரீ பாலாஜி பவன்,

1, சாஸ்திர காலேஜ் ரோடு,

கும்பகோணம் - 612001

Ph : +(91)-435-2424578.

 

3. ஹோட்டல் சண்முக பவன்,

16, கும்பேஸ்வரர் தெற்கு வீதி,

கும்பகோணம் - 612001.

Ph : +(91)-435-2433962.

 

4. கௌரி ஷங்கர் ஹோட்டல்

No 47, ஜான் செல்வராஜ் நகர்,

கும்பகோணம், 612001

Ph : +(91)-9443131276, +(91)-435-2431177, +(91)-435-2430736.

 

5. ரயாஸ் கார்டன் உணவகம்,

No 18 ரயாஸ் ஹோட்டல்,

தலைமை அஞ்சல் அலுவலகம் ரோடு,

கும்பகோணம் , 612 001.

Ph : +(91)-435-2423170, 2423171, 2423172, 2423173.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.38 (451 Votes)

 

இருக்குமிடம்
  

 

 

அருகிலுள்ள கோவில்கள் 

 

சாரநாத பெருமாள் 
16km

சென்னிரியப்பர்
16.3km

மகா மாரியம்மன் 
8.9Km
ஸ்ரீனிவாசபெருமாள்
17.3Km
ஆகாச மாரியம்மன் 
17.7km

வீரமாகாளி
16.6km